Skip to main content

இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;

இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் அளிக்க வேண்டும். சாவியை
ஒப்படைப்பதில் எந்த அதிகாரியும் நியமிக்கப்படாவிட்டால், கருவூல அலுவலரே தனது கைவசம் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் தினசரி அலுவலகப் பணிகள் பாதிக்கும் வகையில், போராட்டங்களில் ஈடுபடுவது போன்று அச்சுறுத்துவதோ, பங்கேற்பதோ தமிழ்நாடு அரசு பணியாளர் விதிகளுக்கு எதிரானதாகும்.


மேலும், பொது மக்களுக்கு சேவைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், 2003-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, அவர்கள் தமிழ்நாடு அத்தியாவசியப் பராமரிப்புகள் சட்டத்தின் கீழ் வருகின்றனர். எனவே, செவ்வாய்க்கிழமையன்று பணிக்கு வராமல், ஒட்டுமொத்த விடுப்பில் பங்கேற்போரின் விடுப்பானது, சட்டப்படி அங்கீகரிக்கப்படாது. பணி செய்யாததால், ஊதியம் வழங்கப்படாது. 
 ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்த விவரங்களை செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்குள்ளாக, இதற்காக வரையறுக்கப்பட்ட அட்டவணையில் விளக்கமாகக் குறிப்பிட்டு மின்னஞ்சல், தொலைநகர், தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க வேண்டும். 

 மண்டல இணை இயக்குநர்கள் தலைமை இடங்களில் அமர்ந்து மாவட்ட கருவூல-கணக்குத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா