Skip to main content

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?


பாலிடெக்னிக்  கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்
. அதாவது தற்போது உள்ள நடைமுறைப் படி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (இயற்பியல்,வேதியியல், கணிதம் போன்ற) பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது முதுகலைப் படிப்பில் (M.A /M.Sc) 60% மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சிப்பெற்றிருந்த்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதனால் 60% க்கு குறைவான மதிப்பெண்கள் வைத்துள்ள  இலட்சக் கணக்கான முதுகலைபட்டதாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இதில் நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களும் 60% மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்  என TRB கூறி வருகிறது. மேலும் போட்டித்தேர்வு  வைத்து தான் தேர்வுச்செய்யப்படுகிறார்கள்  (அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு மட்டும்  போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்வதில்லை இது TRB யின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்திள்ளது). இதில் 60%க்கு குறைவான மதிப்பெண்கள்(10 வருடங்களுக்கு முன் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு) உடையவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்தால் திறமையான பேராசிரியர்களை அதிக அளவில் அடையாளம் காண முடியும். எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் புதிய முறை அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா