Skip to main content

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?


பாலிடெக்னிக்  கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்
. அதாவது தற்போது உள்ள நடைமுறைப் படி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (இயற்பியல்,வேதியியல், கணிதம் போன்ற) பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது முதுகலைப் படிப்பில் (M.A /M.Sc) 60% மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சிப்பெற்றிருந்த்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதனால் 60% க்கு குறைவான மதிப்பெண்கள் வைத்துள்ள  இலட்சக் கணக்கான முதுகலைபட்டதாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இதில் நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களும் 60% மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்  என TRB கூறி வருகிறது. மேலும் போட்டித்தேர்வு  வைத்து தான் தேர்வுச்செய்யப்படுகிறார்கள்  (அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு மட்டும்  போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்வதில்லை இது TRB யின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்திள்ளது). இதில் 60%க்கு குறைவான மதிப்பெண்கள்(10 வருடங்களுக்கு முன் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு) உடையவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்தால் திறமையான பேராசிரியர்களை அதிக அளவில் அடையாளம் காண முடியும். எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் புதிய முறை அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு