Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் இன்று பொறுப்பேற்பு?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி. எஸ்.சி.) 25-ஆவது தலைவராக கே.அருள்மொழி (58) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பொறுப்பேற்கக் கூடும் என அரசுத் துறை வட்டாரங்கள் கூறின. 



 இந்த ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக சி.பாலசுப்பிரமணியன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், புதிய தலைவராக, பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மைச் செயலர் கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
 இன்று பொறுப்பேற்பு?: ஆளுநர் கே.ரோசய்யாவின் உத்தரவின்படி, 62 வயது அல்லது 6 ஆண்டுகள் அதில் எது முதலில் வருகிறதோ அப்போது அருள்மொழி ஓய்வு பெறுவார். அதன்படி, பொறுப்பேற்ற நாளில் இருந்து 4 ஆண்டுகள் வரை பொறுப்பில் நீட்டிப்பார். புதன்கிழமை அவர் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 முனைவர் பட்டதாரி: 1958-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அருள்மொழி பிறந்தார். தோட்டக்கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1985-இல் தமிழக ஐ.ஏ.எஸ். பிரிவில் இணைந்தார். செங்கல்பட்டில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். நகராட்சி நிர்வாகத் துறையில் துணை ஆணையராகவும், வேளாண்மைத் துறையில் இயக்குநராகவும் பணியாற்றினார்.
 2001-இல் நிதித் துறையில் சிறப்புச் செயலராகவும், 2002-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையில் முதல்வரின் சிறப்புச் செயலராகவும், பின்னர் பணியாளர்-பொது நிர்வாகம்-பயிற்சித் துறையின் செயலராகவும் பணியில் இருந்தார்.
 2007-இல் வணிக வரிகள் துறையின் செயலாளராகவும், பண்பாட்டுத் துறை ஆணையராகவும், மாநிலத் திட்ட ஆணையத்தின் உறுப்பினர்- செயலராகவும், பொருளாதாரம்-புள்ளியியல் துறை இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.
 முதல்வருடன் சந்திப்பு: இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் அருள்மொழி செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
 25-ஆவது தலைவர்; 11-ஆவது ஐ.ஏ.எஸ். அதிகாரி
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 1930-இல் உருவாக்கப்பட்டது. இதன் 25-ஆவது தலைவராக அருள்மொழி பொறுப்பேற்க உள்ளார். தலைவர் பதவியை வகிக்கும் 11-ஆவது ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர்.
 சுதந்திரத்துக்கு முன்பு வரை, 5 பேர் தலைவர்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு, தேர்வாணையத்தின் முதல் தலைவராக திவான் பகதூர் டி.என்.நாராயணசாமி பிள்ளை பொறுப்பேற்றார்.
 ஜே.சிவானந்தம், வி.பாலசுந்தரம், எம்.ஏ.செரீப், ஜே.ஏ.அம்பாசங்கர், டி.லட்சுமிநாராயணன், எஸ்.ஆர்.கருப்பண்ணன், டி.முருகராஜ், யாசின்அகமது, ஏ.எம்.காசிவிஸ்வநாதன், ஆர்.செல்லமுத்து உள்ளிட்டோர் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு