தீபாவளி பண்டிகையை ஒட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தீபாவளி பண்டிகையை
யொட்டி 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
கோவை, ஈரோடு, கரூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவற்றில் முக்கிய ரயில்களில் பயணிகள் கூட்டத்தைப் பொருத்து தேவைக்கேற்ப கூடுதலாக 70 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது.
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை உத்தரவையும் மீறி பயணிகள் யாரேனும் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.