Skip to main content

ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஆதார் அட்டை பெற்றவர்களும், அதற்கு விண்ணப்பித்து ஆதார் எண் பெற்றவர்களும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

        இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன
த்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலமாக, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், திருமண நிதியுதவித் திட்டங்கள், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் உள்பட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த சேவை மையங்கள் மூலமாக இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தொடர்புடைய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான பதிவு எண்ணை மட்டும் பெற்றிருந்து, ஆதார் எண் தெரியாவிட்டாலும் பிளாஸ்டிக் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். 14 இலக்க எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஒரு அட்டைக்கு ரூ. 40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஏற்கெனவே ஆதார் எண்ணைப் பெற்றவர்கள், தங்களது ஆதார் எண்ணைத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பிளாஸ்டிக் அட்டையைப் பெறலாம். இதற்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 153 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் மூலம் 38,014 பேர் சொத்து வரியைச் செலுத்தியுள்ளனர் என்று குமரகுருபரன் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு