Skip to main content

ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஆதார் அட்டை பெற்றவர்களும், அதற்கு விண்ணப்பித்து ஆதார் எண் பெற்றவர்களும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

        இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன
த்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலமாக, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், திருமண நிதியுதவித் திட்டங்கள், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் உள்பட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த சேவை மையங்கள் மூலமாக இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தொடர்புடைய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான பதிவு எண்ணை மட்டும் பெற்றிருந்து, ஆதார் எண் தெரியாவிட்டாலும் பிளாஸ்டிக் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். 14 இலக்க எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஒரு அட்டைக்கு ரூ. 40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஏற்கெனவே ஆதார் எண்ணைப் பெற்றவர்கள், தங்களது ஆதார் எண்ணைத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பிளாஸ்டிக் அட்டையைப் பெறலாம். இதற்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 153 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் மூலம் 38,014 பேர் சொத்து வரியைச் செலுத்தியுள்ளனர் என்று குமரகுருபரன் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா