Skip to main content

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைக்க ஆணை
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து, நீதிம
ன்றத்துக்கு தெரிவிப்பதற்காக குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் தமிழக அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற சிறார் நீதிக் குழு ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேஞ்ச் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான வழக்கில் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார். 

அவரது மனு விவரம்:
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட குழந்தைகள் இல்லங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் நன்னடத்தை அதிகாரிகள், சட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, நன்னடத்தை அதிகாரி உள்பட 15 பணியிடங்களை அரசு நிரப்பவேண்டும். ஆனால், அரசு இதுவரை அந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மண்டல அளவில் தலைமை நன்னடத்தை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தன. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு அவர்கள் பிறப்பித்த உத்தரவு:-
தமிழக அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற சிறார் நீதிக் குழு ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். 
இந்தக் குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த மனுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டியவை எவை என பரிசீலித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 19-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு