Skip to main content

தமிழ்நாட்டில் மொழிப்பாடங்களுக்கு 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை ஆய்வில் தகவல்

தமிழநாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3-ல் ஒரு பங்கு  பள்ளிகளில் 10ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்து உள்ளது.  இதனால் மாணவர்களின் ஒட்டு மொத்த செயல்திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பின் தங்கிய பகுதிகளில் இந்த நிலைமை உள்ளது. நாடுமுழுவதும் ஒட்டு மொத்தமாக இந்த
போக்கு உள்ளது. நாடு முழுவதும் 40 சதவீத அளவில் குறைந்தது ஒரு பாடத்திட்ட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

தேசிய சாதனையாளர் சர்வே  அமைப்பு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியானுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள 35.85 சதவீத அரசு பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அண்மையில் உள்ள கேரளாவில்  இது 11.23 சதவீதமாகவும் தெலுங்கானாவில் 29.45 சதவீதமாகவும்,ஆந்திர பிரதேசத்தில் 23.32 சதவீதமாகவும், கர்நாடகாவில் 20.87 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ் நாட்டின் மற்ற பாடங்களுக்கு நன்றாக ஆசிரியர்கள் உள்ளனர்.  இது கணக்கில் 9.92 சதவீதமும், அறிவியலுக்கு 13.42 சதவீதமும், சமூக அறிவியலுக்கு 23.72 சதவீதமும் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் இது இந்திய தேசிய சராசரி 37.89,33.17 ,41.62 விட குறைவாகத்தான் உள்ளது.ஆய்வு கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைவு என்பது  குழந்தைகளின்  மிக மோசமான செயல் திறனுக்கு வழிவகுக்கிறது என சுட்டி காட்டி உள்ளது.

இந்த பிரச்சினை தீவிரமாகவும், தீர்க்கபட வேண்டும் திறம்பட கண்காணிக்கும் வரை இந்த தரத்தை பற்றிய கவலை அர்த்தமற்றது.

கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள்  வாடிக்கையாக தொடர்ந்து  மொழிப்பாடம் எடுத்து வருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆசிரியர்கள் மொழி நுணுக்கங்களை விளக்க முடியாது குறிப்பாக இலக்கணம்.  மொழி அடிப்படை தவறாக கற்பிக்கபட்டால்  மாணவர்கள் போட்டி தேர்வுகளின் போது நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். என அரசு ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறும் போது வகுப்பு ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் உள்பட 2 அல்லது அதற்கும் மேற்பட்ட பாடங்களை எடுக்கின்றனர். அவர்களுக்கு, "இந்த பாடங்களில் போதுமான பயிற்சி இல்லை என்றால் அவர்களால் ஒழுங்காக பாடங்களையும் கற்பிக்க முடியாது என கூறினர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா