Skip to main content

வைபை வசதி பெறும் 100 ரயில் நிலையங்கள் பட்டியல் வௌியிட்டது கூகுள்.

புதுடில்லி: இந்தியாவில் அதிவேக வைபை வசதி பெறும் 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுகள் நிறுவனம் வௌியிட்டுள்ளது. 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அந்நிறுவன தலைமை
செயல் அலுவலர் சுந்தர் பிச்சையுடன் பேச்சு நடத்திய பின், இந்தியாவில் 500 ரயில் நிலையங்களில் அதிவேக வைபை வசதியை ஏற்படுத்தித் தருவதாக கூகுள் அறிவித்தது.


இன்று அதில் 100 ரயில் நிலையங்களின் வரைபடத்தை கூகுள் வௌியிட்டுள்ளது. ஆனால் வரைபடத்தில் ரயில் நிலையங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விரைவில் இந்த விபரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வரைபடத்தை வௌியிட்ட கூகுள் தனது இணையதளத்தில், ''இந்தியாவிலேயே இது மிகப்பெரிய திட்டமாக இருக்கும். பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், உலகிலேயே இது பெரிய திட்டமாக இருக்கும்'' என கூறியுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு