புதுடில்லி: இந்தியாவில் அதிவேக வைபை வசதி பெறும் 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுகள் நிறுவனம் வௌியிட்டுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அந்நிறுவன தலைமை
செயல் அலுவலர் சுந்தர் பிச்சையுடன் பேச்சு நடத்திய பின், இந்தியாவில் 500 ரயில் நிலையங்களில் அதிவேக வைபை வசதியை ஏற்படுத்தித் தருவதாக கூகுள் அறிவித்தது.
இன்று அதில் 100 ரயில் நிலையங்களின் வரைபடத்தை கூகுள் வௌியிட்டுள்ளது. ஆனால் வரைபடத்தில் ரயில் நிலையங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விரைவில் இந்த விபரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரைபடத்தை வௌியிட்ட கூகுள் தனது இணையதளத்தில், ''இந்தியாவிலேயே இது மிகப்பெரிய திட்டமாக இருக்கும். பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், உலகிலேயே இது பெரிய திட்டமாக இருக்கும்'' என கூறியுள்ளது.