Skip to main content

வைபை வசதி பெறும் 100 ரயில் நிலையங்கள் பட்டியல் வௌியிட்டது கூகுள்.

புதுடில்லி: இந்தியாவில் அதிவேக வைபை வசதி பெறும் 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுகள் நிறுவனம் வௌியிட்டுள்ளது. 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அந்நிறுவன தலைமை
செயல் அலுவலர் சுந்தர் பிச்சையுடன் பேச்சு நடத்திய பின், இந்தியாவில் 500 ரயில் நிலையங்களில் அதிவேக வைபை வசதியை ஏற்படுத்தித் தருவதாக கூகுள் அறிவித்தது.


இன்று அதில் 100 ரயில் நிலையங்களின் வரைபடத்தை கூகுள் வௌியிட்டுள்ளது. ஆனால் வரைபடத்தில் ரயில் நிலையங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விரைவில் இந்த விபரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வரைபடத்தை வௌியிட்ட கூகுள் தனது இணையதளத்தில், ''இந்தியாவிலேயே இது மிகப்பெரிய திட்டமாக இருக்கும். பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், உலகிலேயே இது பெரிய திட்டமாக இருக்கும்'' என கூறியுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா