மிகப்பெரும் விண்கல் பூமியின் மேல் மோதுகிறதா?: இணையத்தில் வேகமாக பரவும் வதந்திக்கு நாசா பதில்.
அடுத்த மாதம் செப்டம்பர் 15 - 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த
சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வருகிறது.
குறிப்பாக விண்கல் மோதுவதால், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகள், மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படும் என்று கூறப்பட்டு வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாசா கூறுகையில், ”இந்த தகவலில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. இணயங்களில் கூறப்பட்டுள்ள தேதிகளில் விண்கல்லோ அல்லது வேறு ஏதேனும் வானியல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளும் பூமி மீது விழுவதற்கான ஒரு சிறிய அளவிலான ஆதாரங்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.