Skip to main content

பழைய மாணவர் சேர்க்கை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

தகுதித் தேர்வில், வெற்றிபெற்ற பழைய மாணவர்கள் தொழிற் கல்வியில் சேர வகை செய்யும், சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்,
பழைய மாணவர்களை, தொழிற்கல்வியில் சேர்க்க வகை செய்யும், சட்டப் பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சில மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த ஆண்டில், மருத்துவப் படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள், தங்கள் இடங்களை, சரண்டர் செய்யவும், பழைய வகுப்பிலேயே கல்வியை தொடரவும், அந்த மனுக்களில் கோரப்பட்டு இருந்தது.

மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இதுபோன்ற மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. அதை எதிர்த்த அப்பீல் மனுக்களை, உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. இப்போது, சட்டப் பிரிவை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்துதான், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, பகுதி பகுதியாக மனுத்தாக்கல் செய்வதை, ஏற்க முடியாது.மருத்துவப் படிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், படிப்பில் சேர்ந்து விட்டனர். அதற்கு இடையூறு செய்ய, நாங்கள் விரும்பவில்லை. இந்த மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு