Skip to main content

பழைய மாணவர் சேர்க்கை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

தகுதித் தேர்வில், வெற்றிபெற்ற பழைய மாணவர்கள் தொழிற் கல்வியில் சேர வகை செய்யும், சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்,
பழைய மாணவர்களை, தொழிற்கல்வியில் சேர்க்க வகை செய்யும், சட்டப் பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சில மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த ஆண்டில், மருத்துவப் படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள், தங்கள் இடங்களை, சரண்டர் செய்யவும், பழைய வகுப்பிலேயே கல்வியை தொடரவும், அந்த மனுக்களில் கோரப்பட்டு இருந்தது.

மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இதுபோன்ற மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. அதை எதிர்த்த அப்பீல் மனுக்களை, உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. இப்போது, சட்டப் பிரிவை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்துதான், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, பகுதி பகுதியாக மனுத்தாக்கல் செய்வதை, ஏற்க முடியாது.மருத்துவப் படிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், படிப்பில் சேர்ந்து விட்டனர். அதற்கு இடையூறு செய்ய, நாங்கள் விரும்பவில்லை. இந்த மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா