Skip to main content

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.

இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது.


இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசையை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.


காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை. மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பணி ஓய்வு பெறுவது இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளது? மூன்று ஆண்டு பணி துறப்பிற்க்குப் பின் எத்தனை ஆண்டுகளில் பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது? பதவி உயர்வு நிலை களில் தேர்வு நிலை /சிறப்பு நிலை வாய்ப்புகள்? அடுத்த பட்டதாரி ஆசிரியர் /நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புகள்? அடுத்த ஊதியக்குழு ஊதியம் வித்தியாசங்கள்? இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். 5வது ஊதியக்குழுவில் பதவி உயர்வுக்க்கு 5% கூடுதலாக கொடுத்து 3 ஊதிய உயர்வு வரை கூடுதலாக பெற்றோம். இடைநிலை ஆசிரியர் தேர்வு நிலை +ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலம் சேர்த்து தலைமை ஆசிரியர் நிலையில் தேர்வு நிலை பெற்று வந்தோம். இன்றைக்கு இவற்றை இழந்து உள்ளோம். ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி இழந்த பலன்களைப் பெற தொடர் முயற்சி வேண்டும். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு