Skip to main content

‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை: 17-ம் தேதி முதல் அமல்

‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் புதிய முறை வரும் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பால
முருகன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


‘தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் டுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக் கம் போல் ‘ஆன் லைன்’ மூலம் நேர்காணலுக்கு அனுமதி பெற்று விட்டு பின்னர் வளசரவாக்கம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஏதாவது ஒரு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று நேர்காணலில் பங்கேற்று வந்தனர்.


ஆனால், ‘தட்கல்’ முறையில் விண் ணப்பிப்பவர்களின் ஆவணங் களை மிகவும் கவனமாகபரிசீலிக்க வேண்டியுள்ளதால் அவர்களுக் கான நேர்காணல் சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இனி நடைபெறும்.இப்புதிய நடைமுறை வரும் 17-ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்