Skip to main content

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் மாநில தலைவர் பேட்டி

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் மாநில தலைவர் பேட்டி
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறார்க
ள் என்று மாநில தலைவர் பழனிச்சாமி கூறினார்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று முதல் வேலைநிறுத்தம்

வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஏப்ரல் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.


இது சம்பந்தமாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி நாளை (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும்.

சிறை நிரப்பும் போராட்டம்

முதல் கட்டமாக நாளை (இன்று) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டமும், மறு நாள் (16-ந் தேதி) உண்ணாவிரதமும் நடத்தப்படும். 17-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அரசு முடக்க முயற்சித்து வருகிறது.

பல மாவட்டங்களில் மூடப்பட்ட சத்துணவு மையங்களை சட்டவிரோதமாக திறந்தும், புதிய பணியாளர்கள் மற்றும் மாற்று பணியாளர்களை நியமித்தும் உள்ளது மற்றும் ஊழியர்களை பணி நீக்கம், பணியிடை நீக்கம் செய்யப்போவதாகவும் மிரட்டி வருகிறது.

80 ஆயிரம் பேர்

அரசு என்ன தான் அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டாலும் சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடக்கும். மொத்தம் உள்ள 80 ஆயிரம் பணியாளர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். போராட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறை நிரப்பும் போராட்டம் முடிந்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு