Skip to main content

அமெரிக்காவில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த மும்பை மாணவர்கள்

அமெரிக்காவில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த மும்பை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச வானூர்தி வடிவமைப்புப் (Aeronautical design) போட்டியில் ஆசிய கண்டத்தில் மு
தலிடம் பிடித்து மும்பை என்ஜினீயரிங் கல்லூரி சாதனை படைத்துள்ளது.

புளோரிடாவில் உள்ள லேக் லேண்ட் பகுதியில் கடந்த மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்த இந்த சர்வதேசப் போட்டியில் மும்பையின் அஞ்சுமான்-இல்-இஸ்லாம் எம்.எச்.சாபூ சித்திக் என்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து வந்த 75 குழுக்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் சாபூ சித்திக் கல்லூரியின் ‘ஏரோசோல்ஸ்’ மாணவர்கள் குழு, சர்வதேச வானூர்தி வடிவமைப்பு போட்டியில் ஆசிய கண்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

இது மட்டுமின்றி ‘அட்வான்ஸ்டு கிளாஸ்’ பிரிவில் இரண்டாம் இடத்தையும், ‘மைக்ரோ கிளாஸ்’ பிரிவில் மூன்றாம் இடத்தையும் இந்த குழு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்குக் காரணமான மாணவர்களை நினைத்து பெருமைப்படுவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா