பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேதியியல் பாடத்தில் 'பகுதி ஏ' பிரிவில் ஒரு மார்க் கேள்வியில் வினா 10 மற்றும் 22 ஆகிய இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிரு
ந்தது. இந்த கேள்விகளை எழுதி ஏ, பி, சி, டி., என ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு இருந்தால் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் போனசாக வழங்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...