Skip to main content

அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல்அறிமுகம்


முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.

சாதாரணமாக, ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய, ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் வரிசையில் நின்று, டிக்கெட் பெற வேண்டும். இன்று முதல், டிக்கெட் கவுன்டர்களில் காத்
திருக்க தேவையில்லை. 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பம் கொண்ட, ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யப்படும், அப்ளிகேஷன்கள் எனப்படும் செயலிகள் மூலம், டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட்டின், 'சாப்ட் காப்பி'யை காண்பித்து பயணம் செய்யலாம். இதனால், பேப்பர் பயன்பாடு குறைவதுடன், ரயில் நிலையங்களில் காத்திருக்கத் தேவையும் இல்லை. இப்போது முதற்கட்டமாக, ஆண்ட்ராய்டு போன்களில், டிக்கெட் பெறலாம். பிளாக்பெர்ரி போன்ற தொழில்நுட்பங்களில் இயங்கும் போன்கள் மூலம், இப்போதைக்கு இந்த டிக்கெட் எடுக்க முடியாது.

என்ன செய்ய வேண்டும்:
* ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போனில், 'கூகுள் பிளே ஸ்டோர்' செல்ல வேண்டும்.
* ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவன அப்ளிகேஷனை, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.
* அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, எந்த ஊருக்கு வேண்டுமானாலும், முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கலாம்.
* டிக்கெட் கட்டணத்தை, 'ரயில்வே இ - வாலட்' எனப்படும், பணம் செலுத்தும் முறைக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தின் மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
* பயணத்தின் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட் நகலை காண்பித்தால் போதும்; பேப்பர் டிக்கெட் கிடையாது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா