Skip to main content

அரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி

அரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி: கல்வி அதிகாரிகளை சுற்றுது சர்ச்சை
அரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பள்ளி கல்வித் துறையில் இருந்து அரசுத் தேர்வுத் துறை
தனியாக பிரிக்கப்பட்டு இயக்குனர் பணியிடம் உருவாக்கப்பட்டது. மதுரை உட்பட 6 இடங்களில் மண்டல அரசு தேர்வுகள் துணை இயக்குனர் அலுவலகங்கள் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். ஆனால் 'இத்துறை பணியாளர்களை பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவது மிகவும் குறைவாக உள்ளது' என கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 'கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலக பணியாளர்களுக்கும் தொடர்பில்லாத வேறு துறையான தேர்வுத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுப் பணிகளின்போது தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அவர்களின் இந்த முடிவுக்கு காரணம். அதேநேரத்தில் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சுப் பணியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரி அருணாசலம், பொருளாளர் துரைப்பாண்டி கூறியதாவது: தமிழகத்தில் 1974 முதல் தேர்வுத் துறை தனியாக பிரிக்கப்பட்டது. அங்கு பணியாளர்கள் இருந்தும் பொதுத் தேர்வுகளில் அவர்களை ஈடுபடுத்துவது மிகவும் குறைவாக உள்ளது. 'ஆன்லைன்' பயன்பாடு மூலம் தேர்வுத் துறை பணிகள் மிக எளிமையாக்கப்பட்டன. 90 சதவீதம் தேர்வுப் பணிகளை கல்வி துறை அமைச்சுப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதேநேரம் தற்போது தேர்வுப் பணிகளை காரணம் காட்டி அமைச்சுப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த தேர்வுத் துறை, கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை வலியுறுத்தியும், வரும் தேர்வுகளின் போது அப்பணிகளில் இருந்து விடுவிக்க கோரியும் ஏப்.,15ல் உண்ணாவிரதம், ஏப்.,22 ல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் வாயிற் கூட்டம் போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு