Skip to main content

ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்

'ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை தெரிவிக்கலாம்' என,
அரசு அறிவித்துள்ளது.

ஓய்வூதியர்கள் மார்ச் முதல், பிப்ரவரி மாதம் முடிய, ஓராண்டில் பெறும் மொத்த ஓய்வூதியம் மீது கணக்கிடப்படும் வருமான வரியை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலுவலரால், ஓய்வூதியரின் மாதாந்திர ஓய்வூதியத்தில், பிடித்தம் செய்யப்படுகிறது. தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் தெரிவித்தால், அவர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள் மற்றும் பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை, ஆண்டு துவக்கத்திலே தெரிவிப்பதற்கு வசதியாக, கருவூல கணக்குத் துறை, ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது. இப்படிவத்தை, www.tn.gov.in/karvoolam என்ற இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வருமான வரி பிடித்தத்திற்கு உட்படும் ஓய்வூதியர்கள், தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், கழித்தலுக்கு தகுதியான விவரங்களை, ஜனவரி மாதத்திற்குள், கொடுக்க தவறி இருந்தால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், தங்களிடம் உள்ள, ஆவணங்கள் அடிப்படையில், வரி பிடித்தம் செய்ய நேரிடும்.கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால், திருப்பி வழங்க இயலாது.வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும்போது, வருமான வரித்துறையிடம் இருந்து மட்டும் மிகையாக செலுத்தப்பட்ட வருமான வரியை, மீண்டும் பெற இயலும். இதற்கான படிவம், கருவூல அலுவலரால் கையொப்பமிடப்பட்டு, மே, 31ம் தேதிக்குள் வழங்கப்படும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா