Skip to main content

70 பிரிவுகளில் இணையத்தில் முதுநிலை கல்வி வாய்ப்பு

மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ. 140 கோடி நிதியின் மூலம் 70 முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு யுஜிசி பாடத் திட்டம் தயாரித்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் இணையத்தில் அனைவரும் முதுகலைக் கல்வி பயிலும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பு
து தில்லி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு அறிவுறுத்தி வருகிறது. ஆசிரியர்களே மாணவர்களுக்கு முன்மாதிரி என்பதால், அவர்கள் எப்போதும் தங்களின் அறிவை மேம்படுத்துவதிலும், சிறந்த பண்புகளைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2% ஒட்டுமொத்த கல்விக்காகவும், 1.32% உயர் கல்விக்காகவும் இந்திய அரசு செலவிடுகிறது. மத்திய அரசு தேசிய கல்வித் திட்டத்தின் கீழ், தகவல்-தொடர்பு தொழில்நுட்பத் துறை வயிலாக இணையவழிக் கல்வி பாடத்திட்டம் தயாரிக்க ரூ. 140 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதிமூலம் 70 முதுகலை பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பாடத் திட்டம் தயாரித்துள்ளது. அந்த பாடத்திட்டம் தகவல்-நூலக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் இணையதளம் மூலம் முதுகலை கல்வி பயிலும் சூழல் உருவாகியுள்ளது என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு