Skip to main content

இட பற்றாக்குறையால் திணறும் தனியார் பள்ளிகள்: அங்கீகாரத்தை ரத்து செய்ய திட்டம்


பள்ளிக்கல்வி விதிகளின்படி, இடமின்றி திணறும் தனியார் பள்ளி களின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட
உள்ளது.

தமிழகத்தில், 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில்,4,000 பள்ளிகளில், உரிய இட வசதி இல்லாமல், மாணவர்கள் மூச்சுத் திணறும் வகையில், சிறிய வகுப்புகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். கடந்த, 2004ல் கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில், 94 மாணவ, மாணவியர் உயிரிழந்தனர். பின், தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுக்க, மதுரை காமராஜர் பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு கமிட்டிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்கமிட்டியின் அறிக்கை படி, தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு தனியார் பள்ளியும் குறிப்பிட்ட உள்கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.


* மாநகரம் என்றால், 6 கிரவுண்ட்; மாவட்டத் தலைநகரங்களில், 8 கிரவுண்ட்; நகராட்சிகளில், 10 கிரவுண்ட்; பேரூராட்சிகளில், 1 ஏக்கர்; கிராமங்களில், 3 ஏக்கர் நிலப்பரப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

* வகுப்பறைகளில், ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம், 10 சதுர அடி இருக்க வேண்டும்.

* மேஜை, நாற்காலி மற்றும் எழுதும் மேஜை இருக்க வேண்டும்.

* குறைந்தபட்சம் பயனுள்ள, 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகம், விளையாட்டு மைதானம், தண்ணீருடன் கூடிய கழிப்பறை வசதி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரம் பள்ளி களில், 4,000 பள்ளிகளுக்கு மேல், இடப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு உரிய அங்கீகாரம் வழங்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை இழுத்து மூடாமல் செயல்பட, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் அதிகரிப்பதால், அவற்றை முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இடப் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி இல்லாத பள்ளிகளின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்து உள்ளது. இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள் கூறும் போது, 'இந்தப் பட்டியலில் உள்ள பள்ளிகளில், அதிகாரிகள், கோடை விடுமுறையில் நேரடி ஆய்வு நடத்தி, அறிக்கை தர உள்ளனர். 'பின், விதிகளை மீறி, உரிய இட வசதி, உள்கட்டமைப்பு இல்லாத பள்ளிகளின் உரிமம் மற்றும் தற்காலிக அங்கீகாரத்தை ரத்து செய்து, இழுத்து மூட முடிவெடுக்கப்பட்டு உள்ளது' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு