Skip to main content

முதியோர், ஊனமுற்றோர் உதவித்தொகைக்கு இனி ஆதார் எண் அவசியம்


ஆதார் எண் உள்ளவர்களுக்கு மட்டும் முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோர், விதவையர், ஊனமு
ற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை உத்தரவு மற்றும் ஆதார் அட்டை நகலை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆதார் எண் இல்லாதவர்கள், புகைப்படம் எடுத்து இதுவரை ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியரை நேரில் அணுகி புகைப்படம் எடுத்து உடனடியாக ஆதார் அட்டையைப் பெற்று பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு வரும்போது உதவித்தொகை உத்தரவைக் கொண்டு வருவது அவசியம். இனிவரும் காலங்களில் ஆதார் எண் பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மார்ச் 20 ஆம் தேதிக்குள் ஆதார் எண் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு