Skip to main content

மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம்


'உங்களின் இதயம் சரியாக இயங்குகிறதா? மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? அப்படி வந்தால், எப்போது வரும்?' என்பது போன்ற சந்தேகங்களை இனி மொபைல் போன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இதற்கான 'அப்ளிகேஷனை' மும்பையைச் சேர்ந்த டாக்டர் குழு உருவாக்கி
யுள்ளது. தாராளமயமாக்கலுக்கு பின், மேற்கத்திய நிறுவனங்களின் படையெடுப்பு, நம் நாட்டு மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை அடியோடு மாற்றி விட்டன. அதிகப்படியான வேலை, பொருந்தாத உணவுகள் ஆகியவை, மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை மட்டுமல்லாமல், அவர்களின் உடல் நலனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. அதனால், இளம் தலைமுறையினருக்கு கூட, இப்போது, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.
ஹெல்த் மீட்டர்:

இந்நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் உள்ள, 'மாதவ்பக்' என்ற, அறக்கட்டளை மருத்துவமனையச் சேர்ந்த டாக்டர் கள் குழுவும், தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் இணைந்து, 'ஹார்ட் ஹெல்த் மீட்டர்' என்ற மொபைல் அப்ளிகேஷனை வடிவமைத்து உள்ளனர். இதன்மூலம், மொபைல் போன் மூலமாகவே, இதயத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

இதுகுறித்து, அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரோஹித் சானே கூறியதாவது: நீரிழிவு பிரச்னை, அதிகப்படியான எடை, புகையிலை பயன்பாடு, அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து அதிகரிப்பு போன்றவை தான், இதய நோய் வருவதற்கான காரணங்கள். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து, அதற்கான சிகிச்சைகளை எடுத்தால், பெரிய அளவிலான மாரடைப்பு பிரச்னைகளை தடுக்க முடியும். தற்போதுள்ள சூழ்நிலை யில், மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று பரிசோதனை மேற்கொள்வது இயலாத காரியம்.

கண்காணிக்கும்:

மொபைல் போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால், மொபைல் போன் மூலமாகவே இந்த பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காகவே இந்த அப்ளிகேஷனை உருவாக்கிஉள்ளோம். வயது, உடல் எடை, இதய துடிப்பு போன்ற பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து கணக்கிட்டு, இதயத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும், தற்போதுள்ள உடல்நிலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்றும், அவ்வாறு வந்தால், எந்த வயதில் வரும் என்பதையும், இந்த அப்ளிகேஷன் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். பல்வேறு டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் அளித்த ஆலோசனையின்படி, இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஆண்ட்ராய்டு' போன்களில் 'கூகுள் பிளே ஸ்டோர்' மூலமாக இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா