Skip to main content

'ரூபே' அட்டைகள் மூலம் கட்டணம்


'விசா' மற்றும் 'மாஸ்டர் கார்டு' அட்டைகள் போல, 'ரூபே' பண அட்டையை பயன்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், ராணுவம், உளவு, பாது
காப்பு துறை தகவல்கள் தவிர்த்து, பிற தகவல்களை பொதுமக்கள் கேட்டு அறியும் பொருட்டு, 2005ம் ஆண்டு முதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. தகவல்களை பெற விரும்புபவர்கள், அதற்கான மனுவுடன், நேரடியாகவோ, தபால்
மூலமோ, தகவல் கமிஷனுக்கு விண்ணப்பித்து, 10 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை வங்கிகள் மூலமாகவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும் செலுத்தலாம். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, ரொக்கமில்லாத பணப்பட்டுவாடா அட்டையாக விளங்கும், ரூபே அட்டைகள் மூலம் இணையதளம் வழியாகவும், தகவல்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியும். இணையதளம் வழியாக, தகவல் பெற விரும்புபவர்கள், www.rtionline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அதற்கான தொகையை, ரூபே அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்