Skip to main content

வாயை சுற்றி கொப்புளம்; குட்டீசை தாக்கும் புது நோய்: குழந்தை நிபுணர் ஆலோசனை


வாய், கை, கால்களிலும் கொப்புளங்கள் ஏற்படும் புதுவித நோய், குழந்தைகளை தாக்கத் தொடங்கி உள்ளது. 'அது அம்மை கொப்புளங்கள் அல்ல; பயம் வேண்டாம்' என, குழந்தை நல நிபுணர் குமுதா தெரி
வித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த, மூன்று மாதங்களாக, டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் என, மக்களை பாடாய் படுத்தி வருகிறது.இப்போது, வைரஸ் பாதிப்பு காரணமாக, குழந்தைகளுக்கு, எச்.எப்.எம்.டி., (ஹேண்ட், புட் அண்ட் மவுத் டிசிஸ்) எனப்படும், வாய், கை, கால்களில் சிறு சிறு கொப்புளத்தை ஏற்படுத்தும் பாதிப்பு வருகிறது.தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்பு இருந்தது. தற்போது, மீண்டும் இதன் தாக்கம் தென்படுகிறது.

சென்னை, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதியில் சில குழந்தைகளுக்கு, இந்த பாதிப்பு வந்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.
சென்னை, எழும்பூர் அரசு மருத்துவமனை, குழந்தைகள் சிகிச்சை நிபுணர் குமுதா கூறியதாவது:'காக்ஸ்சாக்கி - ஏ' எனும் வைரஸ் தாக்கத்தால் இந்தநோய் வருகிறது. ஒன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, பலவீனம் காரணமாக வரும்.வாயைச் சுற்றி கொப்புளம் வரும்; வாயிலும் புண் வரும். கை, கால்களிலும் இதுபோன்ற பாதிப்பு வரும். சின்னம்மை கொப்புளம் போல தெரியும்; ஆனால், இது அம்மை அல்ல; பயம் வேண்டாம்; லேசான காய்ச்சலும் இருக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் சில குழந்தைகளை பாதித்தது. தற்போது, மீண்டும் தென்படுகிறது.

கடந்த வாரம், பெற்றோர் பயந்து போய் குழந்தையுடன் ஓடி வந்தனர். 'ஒன்றும் இல்லை; பயம் வேண்டாம்' என, அனுப்பி வைத்தோம்.வாயில் புண், அதனால் ஏற்படும் எரிச்சல் காரணமாக உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும். திரவ உணவுகள் நல்லது.பிரத்யேக தடுப்பு மருந்து ஏதும் தேவையில்லை; ஒரு வாரத்தில் அதுவே சரியாகிவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு