Skip to main content

கோவையில் எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி கோவையில், இன்று தொடங்கி 16–ந்தேதி வரை நடக்கிறது
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி கோவையில் இன்று தொடங்கி 16–ந்தேதி
வரை நடக்கிறது.

தமிழக அரசு அறிவிப்பு
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் சீரிய வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் மொத்த நிறுவுதிறனில் 32 சதவீதமும் நாட்டின் காற்று சக்தி நிறுவு திறனில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டினை சூரிய சக்தியில் முதன்மை மாநிலமாக மாற்றும் உயரிய நோக்கத்தோடும், சூரிய சக்தியை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கோடும் ஜெயலலிதா தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 ஐ தொடங்கி வைத்துள்ளார்.

தொழில்நுட்ப கருத்தரங்கு
மேலும், இந்த நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் விஷன் 2023–ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 15,000 MW குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை விரைவில் அடையும் விதமாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை பல்வேறு திட்டங்களான முதலமைச்சரின் சூரிய மேற்கூரைத் திட்டம் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், தெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் மின்னூட்டுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையும், கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் இணைந்து ‘ரெனர்ஜி 2015 மற்றும் எலெக்ட்ரோடெக் 2015 ’ (RENERGY 2015 ELEKTROTEC 2015) தொழில்நுட்ப கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கு கோவை கொடிசியா வளாகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது.

கோவை கொடிசியா வளாகம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் சார்பில் அமைக்கப்படும் கண்காட்சி 12,500 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. இக்கண்காட்சியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு பெறும் வகையிலும் தனியார் முன்னணி நிறுவனங்களான சன் எடிசன் எனர்ஜி இந்தியா, ஸ்வலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ், போகோஸ் இந்தியா, ஸ்ரீநந்திஸ், சுகம் பவர் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

இக்கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் இன்று முதல் 16–ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு