Skip to main content

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை அனுப்பவேண்டும்

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை அனுப்பவேண்டும் தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு
         
பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசி
ய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

‘தி கேட்டலிஸ்ட் டிரஸ்டு’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பி இருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

பெண் குழந்தைகள் பாதிப்பு
மத்திய அரசு கல்வியின் மீது மேல்வரி(செஸ்) என்று வசூலிக்கும் தொகை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.


இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் சரியான முறையில் செலவழிக்கப்படாமல் பள்ளிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் பெண் குழந்தைகள் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பரிசீலனைக்கு ஏற்பு
இந்தப் புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது.

மேலும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகனுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மாநில அரசின் கடமை
அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 21ஏ வழங்கும் அடிப்படை உரிமையின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் கல்வி கற்கும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறவேண்டும்.
இந்த அடிப்படை உரிமையை மாணவ மாணவியருக்கு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசு விதிக்கும் கல்வி மீதான மேல்வரியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது அதற்கான நோக்கத்துக்காக சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

4 வாரத்துக்குள் பதில் அளியுங்கள்
எனவே மத்திய அரசு தமிழக அரசுக்கு கல்வி மீதான மேல்வரி மூலமாக ஒதுக்கியுள்ள தொகையில் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள தொகை குறித்த விவரம் மற்றும் இந்த நிதி மாநில அரசு எந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தி வருகிறது போன்ற விவரங்களை 4 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தலைமை செயலாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு