Skip to main content

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று நாள்கள் யோகா பயிற்சி


மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூன்று நாள்களுக்கு ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு
யேகாசன வகுப்புகள் நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழகமெங்கும் சென்னை, நீலகிரி, தஞ்சை, மதுரை ஆகிய நான்கு பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது.
மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாத புரம் உள்ளிட்ட 12 தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் 106 பேர் பங்கேற்கின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களுக்கு யோகாசன வகுப்புகள் நடைபெறுகிறது. வகுப்புகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
யேகாசனப் பயிற்சியை யோகிராஜ் ராமலிங்கம், கருணாகரன், ஜெகஜோதி, காந்திமதி ஆகியோர் அளிக்க உள்ளதாகவும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்வதாகவும் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா