Skip to main content

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று நாள்கள் யோகா பயிற்சி


மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூன்று நாள்களுக்கு ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு
யேகாசன வகுப்புகள் நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழகமெங்கும் சென்னை, நீலகிரி, தஞ்சை, மதுரை ஆகிய நான்கு பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது.
மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாத புரம் உள்ளிட்ட 12 தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் 106 பேர் பங்கேற்கின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களுக்கு யோகாசன வகுப்புகள் நடைபெறுகிறது. வகுப்புகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
யேகாசனப் பயிற்சியை யோகிராஜ் ராமலிங்கம், கருணாகரன், ஜெகஜோதி, காந்திமதி ஆகியோர் அளிக்க உள்ளதாகவும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்வதாகவும் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு