Skip to main content

சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது


தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் செவ்வாய்க்கிழமை  (பிப். 17) தொடங்குகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆ
ய்வுக் குழுவும் கூடி விவாதிக்கிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணிக்கு உரையாற்றுகிறார். இதற்காக பேரவை மண்டபம், லாபி உள்ளிட்டவற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றன. ஆளுநர் உரையாற்றிய பிறகு, பேரவை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. இந்தக் குழுவில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டத் தொடர் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாள்களில் பேரவையில் முன்மொழியப்படும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட பலரும் பேசுகின்றனர். இந்த விவாதங்களுக்கு பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.
முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம்: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பல முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்றிக் காய்ச்சல், ராணிப்பேட்டை தொழிலாளர் இறப்பு சம்பவம், போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்புவர் எனத் தெரிகிறது. நான்கு நாள்கள் வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கியப் பிரச்னைகள் எழுப்பப்படுவதுடன், அதற்கு ஆளும் தரப்பிலும் உரிய பதில்கள் அளிக்கப்படும். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவுகளும் பேரவை விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு