Skip to main content

நாளை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச வழிகாட்டி முகாம்


சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (பிப். 16) ராமநாதபுரத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 23.5.2015ஆம் தேதி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வும் மறுநாள் 24ஆம் தேதி காவலர்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. இத்தேர்வுகளுக்கான இலவச வழிகாட்டி முகாம் திங்கள்கிழமை ராமநாதபுரம் வலம்புரி மகாலில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமினை சென்னை போகஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. சிபிகுமரன் நடத்தவுள்ளார். இதில் பட்டப்படிப்பு முடித்த 20 வயது முதல் 33 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். இம்முகாமில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஸ்பெக்டிரம் அகாதெமியின் இயக்குநர் ஏ. செந்தில்குமார் செய்துள்ளார். இலவச வழிகாட்டி முகாமில் கலந்து கொள்ள 9787248947 மற்றும் 9159991214 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு