Skip to main content

நாளை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச வழிகாட்டி முகாம்


சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (பிப். 16) ராமநாதபுரத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 23.5.2015ஆம் தேதி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வும் மறுநாள் 24ஆம் தேதி காவலர்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. இத்தேர்வுகளுக்கான இலவச வழிகாட்டி முகாம் திங்கள்கிழமை ராமநாதபுரம் வலம்புரி மகாலில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமினை சென்னை போகஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. சிபிகுமரன் நடத்தவுள்ளார். இதில் பட்டப்படிப்பு முடித்த 20 வயது முதல் 33 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். இம்முகாமில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஸ்பெக்டிரம் அகாதெமியின் இயக்குநர் ஏ. செந்தில்குமார் செய்துள்ளார். இலவச வழிகாட்டி முகாமில் கலந்து கொள்ள 9787248947 மற்றும் 9159991214 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா