Skip to main content

கரூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் 5 பதக்கம் வென்று சாதனை

உலக அளவிலான போட்டிகளில் கரூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் 5 பதக்கம் வென்று சாதனை
உலக அளவிலான போட்டிகளில் கரூர் மாவட் டத்தை சேர்ந்த என்ஜி
னீயரிங் மாணவர் 5 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக அளவிலான போட்டி

உலக அளவிலான சிலம்பம், மான்கொம்பு, வால்வீச்சு, சுருள்வால், கத்திவீச்சு ஆகிய போட்டிகள் மலேசியாவில் உள்ள ஜோகாரில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 60 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தமிழக அளவில் 40 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த தங்கதுரை மகன் ராஜா (வயது 19). இவர் கோவை தனியார் என்ஜினீயர் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறார். இவர் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்த வால்வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை பெற்றார். அதேபோல் மான்கொம்பு போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வாழ்த்து

சிலம்பாட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். மேலும், சுருள்வால்வீச்சு, மற்றும் கத்திவீச்சு ஆகிய போட்டிகளில் 3-ம் இடம் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றார். உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு ஐந்து பதக்கத்தை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் கலந்து கொண்டு நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் திரும்பிய மாணவன் ராஜாவிற்கு பஸ் நிலையத்தில் இருந்து தாரைதப்பட்டை முழங்க பொதுமக்கள் திரளான வரவேற்பு அளித்தனர். ஐந்து பதக்கத்தை வென்ற மாணவன் ராஜாவிற்கு தம்பிதுரை எம்.பி., அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, காமராஜ், எம்.எல்.ஏ. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு தலைவர் முத்துசாமி, நகர செயலாளர் தங்கதுரை மற்றும் பொது மக்கள் வாழ்த்து தெரிவித் தனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு