Skip to main content

பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி


பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பிரித்வி - 2 ஏவுகணை
ச் சோதனை, ஒடிசா மாநிலம் சாந்திபூரில் நேற்று நடத்தப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், ஏவுகணைச் சோதனை வெற்றியடைந்ததாகவும்,
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரானது. 500 முதல், 1,000 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, துல்லியமாக தாக்கும் திறன் உடையது. சோதனையின் போது, ஏவுகணையின் செயல்பாடு, போக்கு ஆகியவை, ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டதாக, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்