Skip to main content

காரைக்​கு​டி​யில் பிப்.​ 13 இல் புத்​த​கத் திரு​விழா தொடக்​கம்


சிவ​கங்கை மாவட்​டம் காரைக்​கு​டி​யில் மாநில அள​வி​லான புத்​த​கத் திரு​விழா கம்​பன் மணி​மண்​ட​பத்​தில் வரும் வெள்​ளிக்​கி​ழமை ​(பிப்.​ 13) தொடங்கி 22-ஆம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​
இது​கு​றித்து காரைக்​கு​டிப் புத்​த​கத் திரு​விழா குழுத் தலை​வர் பேரா
​சி​ரி​யர் அய்க்​கண் செவ்​வாய்க்​கி​ழமை செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​ய​தா​வது:​ 13-ஆவது ஆண்டு புத்​த​கத் திரு விழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடை​பெ​ற​வுள்​ளது.​ ஆண்​டு​தோ​றும் 40 ஆயி​ரம் மக்​கள் இந்​தப் புத்​த​கத் திரு​வி​ழாவை காண வரு​கை​தந்து புத்​த​கங்​க​ளைக் குறைந்த விலை​யில் வாங்​கிப் பய​ன​டை​கின்​ற​னர்.​
சென்னை,​​ கோவை,​​ மதுரை,​​ சேலம்,​​ திருச்சி உள்​ளிட்ட பல்​வேறு நக​ரங்​களி​லி​ருந்து முன்​னணி பதிப்​ப​கத்​தார் பங்​கேற்​கின்​ற​னர்.​ சுமார் 50 அரங்​கு​கள் வரை அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ தின​மும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை​யும்,​​ சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை​யும் புத்​த​கங்​களை பார்​வை​யி​ட​லாம்.​
தின​மும் காலை​யில் பள்ளி,​​ கல்​லூரி மாண​வர்​க​ளது படைப்​பாற்​றல்,​​ இலக்​கி​யப்​போட்​டி​கள் நடத்​தப்​ப​டும்.​ பொது​மக்​க​ளுக்கு விநாடி-​வினா போட்​டி​கள் நடத்​தப்​ப​டும்.​
 போட்​டி​க​ளில் வெல்​வோ​ருக்கு புத்​த​கங்​களை பரி​சாக வழங்​கு​கி​றோம்.​ கடந்த ஆண்டு இது​போன்று சுமார் ரூ.​ 60 ஆயி​ரம் மதிப்​புள்ள புத்​த​கங்​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டது.​ மேலும் மாலை நேரங்​க​ளில் 2 பள்​ளி​க​ளைச்​சேர்ந்த மாணவ,​​ மாண​வி​க​ளின் கலை​நி​கழ்ச்​சி​க​ளும் நடை​பெ​றும்.​
துவக்க விழா​வில்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார் ஆசி​யுரை வழங்​கு​கி​றார்.​ இலக்​கி​யப் பேச்​சா​ளர் நாஞ்​சில் சம்​பத் தொடக்​கி​வைத்​துப் பேசு​கி​றார்.​ விழா​விற்​கான ஏற்​பா​டு​களை காரைக்​குடி புத்​த​கத்​தி​ரு​விழா குழு​வி​னர் செய்து வரு​கின்​ற​னர் என்​றார்.​

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா