சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு (படம்) புதுதில்லி குளோபல் எக்கினாமிக் புகாரகரஸ் மற்றும் ரிசர்ச் பவுன்டேஷன் அமைப்பின் இந்திராகாந்தி சத்பவனா தங்கப்பதக்க விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்லிங்கம் திருவாரூர் திரு.வி.க அரசு
கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார். இவருக்கு புதுதில்லியைச் சேர்ந்த குளோபல் எக்கனாமிக் புராகரஸ் மற்றும் ரிசர்ச் அசோசியேஷன் என்ற அமைப்பு சிறந்த பணிக்கான இந்திராகாந்தி சத்பவானா கோல்ட் மெடல் அவார்டு வழங்கியுள்ளது. பெங்களூரில் நவ.19-ம் தேதி நடைபெற்ற விழாவில் பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு, முன்னாள் கர்நாடக மாநில ஆளுநர் வி.எஸ்.மாலிமத் விருதினை வழங்கி கவுரவித்தார்.
பேராசிரியர் டி.விஸ்வலிங்கம் 32 ஆண்டுகளாக சிதம்பரம், நாமக்கல், காட்பாடி, சைதாப்பேட்டை குடியாத்தம் திருவாரூர், அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். ஓராண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.