Skip to main content

பள்ளிகளில் கழிப்பறை வசதி கல்வித்துறை இயக்குனர் அதிரடி


கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட பள்ளி கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் பல உள்ளன. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதி மற்றும் கலெக்டர் விருப்ப நிதி மூலம், அனைத்து மாவட்டங்களிலும் கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதியை உறுதி செய்து, அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத 23 பள்ளிகளில் ஊரக வளர்ச்சி முகமை நிதி மூலம், உடனடியாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு