Skip to main content

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.சி. உத்தரவு


புதுடில்லி: நாடு முழுவதும், 45 மத்திய பல்கலை; 318 மாநில அரசு பல்கலைகள்; 185 தனியார் பல்கலைகள்; 129 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. இவை தவிர, கல்லூரிகள், என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.,க்கள் என பல்வேறு கல்வி
நிறுவனங்கள் உள்ளன.

பல்கலைகளில், புதிய பாடப்பிரிவு துவக்கம், அங்கீகாரம் பெறுதல், ஆசிரியர் நியமனத்திற்கு யு.ஜி.சி., அனுமதி அவசியம். யு.ஜி.சி., நிதி உதவிடன் செயல்படும், அனைத்து, மத்திய, மாநில பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., தலைவர் வேத பிரகாஷ் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும், பல்வேறு பல்கலைகளில், பல்வேறு பாடங்களில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. அந்த வகுப்புகளை கவனிக்க, பகுதி நேர, ஒப்பந்த, தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். பல்கலைகளில் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்களை, விளம்பரங்கள், பல்கலை இணையதளங்கள், கல்வியாளர்கள் பரிந்துரையின் பேரிலும் நியமிக்கலாம்.

காலிப் பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் நிரப்ப வேண்டும். அதில், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இப்பிரச்னையில், பல்கலையின் பொது வளர்ச்சி நிதியை யு.ஜி.சி., நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படாது என நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு