Skip to main content

2 நிமிடத்தில் பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அமல்: மத்திய அரசுதீவிரம்.

திருச்சி: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்காக (16வயதுக்கு மேல்) சிறப்பு பாஸ்போர்ட் மேளா திருச்சி சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் நேற்று நடந்தது. 
திருச்சி, கரூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர்,
நாகப்பட்டினம் ஆகிய 8மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பூர்த்தியான 10ம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:

கல்வி நிலையங்கள் ஒத்துழைத்தால் இதுபோன்று மாதம் 2 முறை பாஸ்போர்ட் மேளா நடத்த தயாராக உள்ளோம். சிங்கப்பூரில்2 நிமிடத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஏடிஎம் எந்திரம் போல உள்ள மெஷினில் கைரேகையை பதிவு செய்தால், 2 நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும். இதை 10 பேர் கொண்ட குழுவினர் சென்று பார்த்து வந்துள்ளோம்.இதற்கு போலீசாரின் ஒத்துழைப்பு மிக அவசியம். 

ஒருவர் பற்றிய குற்றத்தகவல்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். இந்தமுறை அமல் செய்யப்பட்டால் பாஸ்போர்ட் வழங்கும்போது போலீஸ் ‘வெரிபிகேசன்‘ தேவைப்படாது.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. போலீசார் ஒத்துழைத்தால் இத்திட்டம் விரைவில் சாத்தியப்படும். பாஸ்போர்ட் எடுக்கும் நேரம், காலம் மிச்சமாகும் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு