Skip to main content

தீயணைப்பு துறையில் 1,000 காலி பணியிடங்கள்: மூன்று மாதங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை


''தீயணைப்புத் துறையில், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்,'' என, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர்,
ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.

ரூ.18 கோடி:


மதுரையில், அவர் கூறியதாவது: தீயணைப்புத் துறைக்கு, அரசு, 18 கோடி ரூபாய் வழங்கியது. இதைக்கொண்டு நுரை தள்ளும் வண்டி ஐந்து மற்றும் 30 நீர் வண்டிகள் வாங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட அலுவலங்களுக்கும், 'இன்டர்நெட்' வசதி செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்புத் துறையில், 1,000 காலி பணியிடங்கள் உள்ளன. சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், மூன்று மாதங்களில் நிரப்பப்படும். சர்வீஸ் அடிப்படையில், வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 308 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில், வாடகை கட்டடங்களில் இயங்கும், 72 நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு, இரண்டு நிலையங்கள் சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

மாதம் இருமுறை:


வீரர்கள், மாதத்திற்கு இருமுறை, 'மாஸ் டிரில்' செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. சிவகாசி பட்டாசு ஆலைகளில், வெடிமருந்து பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, தீயணைப்புத் துறையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும் போன்ற பரிந்துரைகளும், அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். சென்னை பாலவாக்கத்தில், 12.84 ஏக்கரில், நவீன வசதிகளுடன் பயிற்சி மையம் அமைகிறது. மதுரையில், மண்டல பயிற்சி மையம் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா