Skip to main content

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.



சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ்
தேர்வு எழுதும் மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 2ம் தாளில் உள்ள ஆங்கில மொழி திறனறி கேள்விகளுக்கான மதிப்பெண்கள்,தேர்வு எழுதுவோரின் மொத்த மதிப்பெண்ணில் (கிரேடு அல்லது மெரிட்) சேர்க்கப்படாது என மக்களவையில் அமைச்சர் ஜித்தேந்தர் சிங் அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வின் முதல் தாள் மற்றும் 2ம் தாளில் பெறப்படும் மதிப்பெண்களில், ஆங்கில மொழிக்கான மதிப்பெண்களை கழித்தபின், மொத்த மதிப்பெண் (கிரேடு) கணக்கிடப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் 10ம் வகுப்பு அளவிலேயே இருக்கும். அதற்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படாது என்பதால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு