Skip to main content

தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற 8ம் வகுப்பு மாணவர்கள் மேல்படிப்பு
படிக்க வசதியாக மத்திய அரசு சார்பில் ரூ.1500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
7ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவ மாணவியர் இந்த தேர்வில் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம். 

இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இணையதள முகவரி   லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ  ஆகும். பள்ளியில் இருந்தே பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 22ம் தேதிக்குள்,  பெற்று பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை ஆகஸ்ட் 28க்குள் முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 28ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் பெறக்கூடாது என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா