Skip to main content

பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான விண்ணப்பம் வினியோகம்


அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.

 அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள்
காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்.,26 ல் நடத்த உள்ளது. இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கு பி.இ., அல்லது பி.டெக்., மற்றும் எம்.இ., அல்லது எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு எம்.ஏ., அல்லது எம்.எஸ்.சி., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 55 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2014 ஜூலை 1 ல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.,20) முதல் வினியோகிக்கப்படுகிறது. ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்வு கட்டணம் ரூ.300, மற்ற பிரிவினர் ரூ.600 யை பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி.,யில் சலானாக செலுத்த வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.,5 மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா