Skip to main content

காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் கல்வி அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளிகளில் 10,12-வது வகுப்பு காலாண்டுத் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ்2 தேர்வு செப்டம்பர் 15இல் தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அனுப்பிய சுற்றரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவ, மாணவிகள் வீதம் தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வறை ஒன்றுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும். குறிப்பாக எந்தப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்படுகிறதோ, அப்பாடம் தொடர்பான ஆசிரியர்களை அறைக் கண்காணிப்பாளர் பணியில் எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.

அரசு பொதுத் தேர்வு போல் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை அறிந்து கொள்ளும் வகையில் இத்தேர்வை நடத்த வேண்டும். மேலும், ஆசிரியர்கள் பாடத் தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை பொதுத்தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும். அதோடு, மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவ, மாணவிகளிடம் அளித்து சரிபார்க்க வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு