Skip to main content

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் குறைந்த தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை

கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனியாகவும் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய
மேற்பார்வையாளர்கள், உதவி தொடக்ககல்வி அலுவலர்களுக்கு தனியாகவும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் சபீதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் வரும் 4ம் தேதி அனைத்து சிஇஓக்களின் நேர்முக உதவியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை 8 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் கூட்டங்களில் அருகே உள்ள மாவட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இது தவிர நடப்பு கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு ஆங்கிலப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட விவரம், கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட விபரம் உள்ளிட்ட 18 முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 13ம் தேதி திருவள்ளூரில் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி விழுப்புரத்திலும், 18ம் தேதி தஞ்சாவூரிலும், 19ம் தேதி புதுக்கோட்டையிலும், 20ம் தேதி திண்டுக்கல்லிலும், 21ம் தேதி கரூரிலும், 22ம் தேதி கோவையிலும் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. கடைசி கட்டமாக நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் வரும் செப்.1ம் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா