Skip to main content

பிறப்பு, இறப்பு பதிவு பணி 34 பேருக்கு வேலை தர முடிவு.

பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ், பிறப்பு, இறப்பு விவரங்கள் பதிவு செய்ய, மாவட்டந்தோறும் மையங்கள் உள்ளன. இந்த மையத்திற்கு,
தற்காலிகமாக, 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.மாவட்டந்தோறும் ஒருவரும், தலைமையகத்தில் இரண்டு பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.இதற்கு, 'பி.எஸ்.சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., படித்து, கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த சான்றிதழ் படிப்பும் படித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளோர், தீதீதீ.tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 31ம் தேக்குள், அனுப்ப வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா