Skip to main content

பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது.

இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கல்வியில் மேம்பாடு அடைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தற்போது பி.ஏ., பி.எஸ்.சி. படித்தவர்களுக்கு பி.எட். என்ற ஆசிரியர் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது இது தற்போது ஒரு ஆண்டுகால படிப்பாகும். அதுபோல எம்.எட். படிப்பும் ஒரு வருட காலபடிப்பாகும். இந்தியாவில் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும். இதையொட்டிதேசிய ஆசிரியர் கல்விக்குழு பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் தலா 2 வருடமாக உயர்த்த கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியா முழுவதும் இருந்து அனைத்து ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் கருத்துக்களை கடிதமாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. தேசிய ஆசிரியர் கல்விக்குழு பரிசீலித்து முடிவை எடுக்க உள்ளது. பெரும்பாலும் பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் 2 ஆண்டுகளாக உயர்த்துகிறது.

இந்த 2 ஆண்டு படிப்பு அடுத்த கல்வி(2015-2016) ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டால் ஆசிரியர்களும் நன்றாக பயிற்சி பெற்று மாணவர்களுக்கு இப்போது உள்ளதை விட மேலும் சிறப்பாக கல்வி கற்பிக்க முடியும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு