Skip to main content

தமிழ்த்துறை பாடத்தில் 14 பகுதிகள் நீக்கம் : அழகப்பா பல்கலை உறுதி...

தமிழ்த்துறை பாடத்தில் 14 பகுதிகள் நீக்கம் : அழகப்பா பல்கலை உறுதி
அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் தமிழ்த்துறை முதல் ஆண்டு பாடத்தில் சர்ச்சைக்குரிய 14 பகுதிகள் நீக்கப்பட உள்ளதாக பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலை, அதைச் சார்ந்த கல்லூரிகளுக்கு கவிஞர் வாலியின்
'நிஜகோவிந்தம்' என்ற கவிதைத் தொகுப்பு ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 'நாற்காலி ஆசை' என்ற கவிதையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானி குறித்தும்; 'ஜன சமுத்துரத்தில் ஒரு தீவாக...' என்ற கவிதையில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் குறித்தும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் 'ஒருதலைக் காமம்' என்ற கவிதையில் தாம்பத்ய உறவு குறித்து ஆபாசமான வரிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஜூலை 26 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பல்கலைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட குழுவினர் பல்கலை அதிகாரிகளை நேற்று சந்தித்தனர். 'தினமலர்' நாளிதழில் குறிப்பிடப்பட்ட மூன்று கவிதைகள் மற்றும் 14 கவிதைகளை நீக்க பல்கலை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'பாடத்தில் உள்ள 52 கவிதைகளும் பல்கலை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அத்வைதம், நாற்காலியின் ஆசை, சுயமரியாதை, ஜன சமுத்திரத்தில் ஒரு தீவாக, ஆசிரியர் தீர்ப்பே முடிவானது, போதுமடா சாமி, அப்பன் காட்டிய வழி, இருட்டில் இரண்டு நிழல்கள், நடுத்தர குடும்பத்தில் ஒரு நம்பிக்கை துரோகம், ஒருதலைக் காமம், ஒரு நாம சண்டை, உலகோடு ஒட்டி வாழ், பிறவிப்பயன், தமிழை பற்றி... என்ற கவிதைகள்
நீக்கப்பட உள்ளதாக பல்கலை தரப்பில் உறுதி அளித்தனர்' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு