Skip to main content

யு.பி.எஸ்.சி.,யின் வனத்துறை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

மத்திய அமைச்சகத்தில் காலியாக உள்ள இடங்களை யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு நடத்தி நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் வனத்துறை சார்ந்த 85 காலியிடங்களை நிரப்புவதற்கான பாரஸ்ட் சர்வீசஸ் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 01.08.2014 அடிப்படையில் 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள்
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி: அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், விவசாயம், வனவியல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். 

தேர்ச்சி மையங்கள்: யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட தேர்வை தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையம் ஏதாவது ஒன்றில் எழுதலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இந்தத் தேர்வை எழுதுவதற்கு ரூ.100/-ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாகவோ அல்லது நெட்பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2014

இணையதள முகவரி: http://upsc.gov.in/

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு