Skip to main content

கணித மேதை காரல் பெட்ரிக் காஸ் பிறந்த தினம் இன்று,

1781ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு கட்டட மேஸ்திரியான தன்னுடைய தந்தையின் கூலிக்கணக்கில் சில தொழிலாளர்களுக்குப் போடப்ப்ட்ட தொகையில் தவறு நேர்ந்திருப்பதை மூன்று வயது குழந்தை சுட்டிக்காட்டியது. ஒரு நாள் முழுவதும் தலையைப் பிய்த்துக்கொண்டு கணக்கிட்டால் குழந்தை சொன்னது சரிதான், பேச்சு வருவதற்கு முன்பே எண்களுடன்
விளையாடியதைப் பார்த்து பெற்றோர் பூரித்தனர். 


ஏழாவது வயதில் ஒரு நாள் வகுப்பில் நுழைந்ததுமே, எல்லா மாணவர்களையும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக ஆசிரியர் கொடுத்திருந்த ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. காஸுக்கு உடனே தோன்றியது: 1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன; அதாவது, {1, 100}, {2, 99}, {3, 98}, முதலியவை; ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050. ஆசிரியருக்கு மாணவன்மேல் உவகை பொங்கியது. பையனை பள்ளி நேரங்களுக்கு அப்பால் கணிதத்தின் மற்ற நெளிவு சுளுவுகளையெல்லம் கற்றுத் தருவதற்காக அனுமதி கேட்டு அவன் பெற்றோர்களை அணுகினார்


அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால், வானியல், புவிப் பரப்பு, எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து சாதனை புரிந்தவர்.


கணிதத்திலும் அதன் இணையிலான இயற்பியலிலும் காஸின் பங்களிப்பு அவரி வரலாற்றில் தலைசிறந்த மேதைகளில் ஒருவராக்கியது. கணிதவியலின் அலகான ‘காஸ்’ அவரது நினைவாக சூட்டப்பட்டதுதான். அடிப்படைகணிதம், லாக்கணிதம் மட்டுமின்றி கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் டேனிஷ் மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார். இரு தனித்தனி விசைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது மூன்றாவதாக ஒரு புதியவிசை புதிய திசையில் முளைப்பதை காஸ் கண்டுபிடித்தார்.




Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி