ஒடிஷாவின் வீலர் தீவில் இந்தியா இன்று காலை நவீன ரக ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்த ஏவுகணை எதிரிநாட்டு ஏவுகணை, போர் விமானங்களை நடு வானில் இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என ராணுவ தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் டிஆர்டிஓ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவிகுமார் குப்தா கூறும் போது கடற்படை விமானத்தில் இருந்து காலை 9 மணி ஆறு நிமிடங்களுக்கு எதிரி இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சமிக்கைகளைக் கொண்டு, வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக ஏவுகணை, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது என்று கூறினார்.
மேலும் சோதனை இலக்கு இயக்குனர் M.V.K.V. பிரசாத் இந்த தோதனை வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார