Skip to main content

மாணவர் உடல் திறனை மேம்படுத்த பயிற்சி முகாம்கள்

பள்ளிகளில் தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் விளையாட்டுக்களில் தனிக்கவனம் செலுத்தி உடல்திறனை வலுப்படுத்துவதற்காக பயிற்சி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

எறிபந்து பயிற்சி முகாம் கரூரில் இன்று துவக்கம்

கரூர்: "கோடைகால எறிபந்து முகாம் இன்று துவங்குகிறது" என, மாவட்ட எறிபந்து கழக தலைவர் நல்லசாமி கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால எறிபந்து பயிற்சி முகாம், மாவட்ட எறிபந்து கழகமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தவுள்ளன.

இந்த பயிற்சி முகாம் இன்று முதல் மே 2ம் தேதி வரை வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை 6.30மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். பயிற்சி முகாமில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும்.

முகாமில், பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விபரங்களுக்கு கரூர் மாவட்ட எறிபந்து கழக செயலாளர் மற்றும் வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜாவின் மொபைல் ஃபோன் எண்ணை 94422-42485 தொடர்பு கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு