Skip to main content

மாணவர் உடல் திறனை மேம்படுத்த பயிற்சி முகாம்கள்

பள்ளிகளில் தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் விளையாட்டுக்களில் தனிக்கவனம் செலுத்தி உடல்திறனை வலுப்படுத்துவதற்காக பயிற்சி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

எறிபந்து பயிற்சி முகாம் கரூரில் இன்று துவக்கம்

கரூர்: "கோடைகால எறிபந்து முகாம் இன்று துவங்குகிறது" என, மாவட்ட எறிபந்து கழக தலைவர் நல்லசாமி கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால எறிபந்து பயிற்சி முகாம், மாவட்ட எறிபந்து கழகமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தவுள்ளன.

இந்த பயிற்சி முகாம் இன்று முதல் மே 2ம் தேதி வரை வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை 6.30மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். பயிற்சி முகாமில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும்.

முகாமில், பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விபரங்களுக்கு கரூர் மாவட்ட எறிபந்து கழக செயலாளர் மற்றும் வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜாவின் மொபைல் ஃபோன் எண்ணை 94422-42485 தொடர்பு கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா