Skip to main content

இன்று(18/04/2014)

ஏப்ரல் 18


நிகழ்வுகள்

1025 - போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.
1797 - நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.
1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1880 - மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் கொல்லப்பட்டனர்.

1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள்.
1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
1930 - பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.
1941 - ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1958 - இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 - சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.
1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993 - பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 - லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
0
1858 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
1905 - ஜார்ஜ் எச். ஹிட்சிங்க்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)
1940 - ஜோசப் கோல்ட்ஸ்டெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்

1976 - ஹென்ட்றிக் டாம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879)
2007 - லெட்டினண்ட் கேணல் கலையழகன் தமிழீழத்தின் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர். (பி. 1976)

சிறப்பு நாள்

ஈரான் - இராணுவ நாள்
சிம்பாப்வே - விடுதலை நாள் (1980
உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்